நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

 நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
      
      2013ம் ஆண்டு குட்கா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது. முன்னாள் டிஜிபி இரண்டு ஐஜி க்கு சம்மன்.
         எத மறைக்கிறதுக்கு இப்ப இந்த தூசிய தட்டி இருக்கீங்கன்னு தெரியலையே?!?!
***************************
     ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.- மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.
      அங்க நடந்த கடைசி போராட்டத்தில கொத்துக் கொத்தா தமிழர்கள் செத்து விழுந்தப்ப  இங்கே இருந்த நீங்களும் உங்கள சேர்ந்தவர்களும் என்ன செஞ்சீங்கன்னு  தெரிஞ்சுக்கலாமா???
********************************
         உயர் மின் கோபுரம் அமைத்தாலும் விவசாயம் செய்யலாம். போர்வெல் தான் போடமுடியாது .தடையில்லா மின்சாரத்தை தமிழக மக்களே தடுக்கலாமா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கருத்து .
          எட்டு வழிசாலை, எரிவாயு குழாய் திட்டம் ,இப்போ உயர் மின் கோபுரம்…. இதுக்கெல்லாம் விவசாய நிலத்த விட்டால உங்களுக்கு வேற இடமே கிடைக்காதா? அது என்ன போர்வெல் போட முடியாது ஆனால் விவசாயம் பண்ணலாம் ???மகாபிரபு…. இங்க என்ன உங்க ஆட்சியிலே மாதம் மும்மாரியா  பொழியுது?
********************************
        அரசியலில் நுழையும் ஆசை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை ஆனால் இன்று நான் அதில் ஒரு அங்கம் ஆகிவிட்டேன் மக்களுக்காக என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்._ மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
          அப்படியாங்க  எசமான். நீங்க சொன்னீங்கன்னா சரியாத்தான் இருக்கும்.
*************************************
        மகாராஷ்டிர அரசியல் சூழ் நிலையால் குதிரை பேரம் நடப்பதை தடுக்க தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. 
        
            என்னடா இன்னும் ஆரம்பிக்கலயேன்னு  நெனச்சேன்…. ஆரம்பிச்சாச்சா…. நடத்துங்க…. நடத்துங்க…
***********************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...