ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி!

ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி!

     ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 

     ராஜஸ்தான் மாநிலம் லகாசர் கிராமம் அருகே பிகானேர் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை, பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

      காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 15 பேரில், மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

      முன்னதாக, இரு வாகனங்களும் வேகமாக மோதியதால் இரு வாகனங்களும் தீ பிடித்தன. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு உள்ளூர் மக்கள், தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

      மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!