4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியை நடப்பாண்டில் 4வது முறையாக எட்டியுள்ளது. அணையின் நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசன தேவைக்காக 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4வது முறையாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!