மனைவி

 மனைவி

சோகத்தில் சாயும் போது

தோள் தருபவள்

கோபத்தில் சாடும் போது

தாங்கி கொள்பவள்


ஆசையில் ரசிக்கும் போது

உருகி மகிழ்பவள்

அசதியில் அமரும் போது

தலை கோதுபவள்


உடல் நிலை குறையும் போது

உயிர் துடிப்பவள் 

மோகத்தில் அனைக்கும் போது

துணை வருபவள்


முதுமையில் துவளும் போது

தாயாய் இருப்பவள்

உடலும் உயிருமாய் கலந்து

உயிர் தருபவள் மனைவி!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...