இன்றைய முக்கிய செய்திகள்

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.இன்று முதல் இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்.

எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம்.

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம். 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று காலை 6:36 மணிக்கு ஏற்பட்டது – இந்திய வானிலை ஆய்வு மையம்.

’7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை’ –  அமைச்சர் ஜெயக்குமார்.’அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு’அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அகவிலைப்படி 12%லிருந்து 17%ஆக உயர்வு: தமிழக அரசு.

’புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை’ தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான 28ம் தேதி விடுமுறை.அக்டோபர் 28ம் தேதிக்கு பதில் நவம்பர் 9ம் தேதி வேலை நாள் – முதல்வர் நாராயணசாமி.

கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ். இடுக்கிக்கு ஆரஞ்ச் அலர்ட், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம்.

புதுச்சேரி அரசு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. புதுச்சேரி மாநில அரசு, C மற்றும் B குரூப் ஊழியர்களுக்கு ரூ.6,908மும், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,184மும்  வழங்கப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!