நடிகர் பிரபுவின்….! புது அவதாரம்

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ஆர்வம் காட்டியுள்ளார். மற்றும் கார்த்தி விக்ரம் அமிதாப் பச்சன் ஜெயம்ரவி ஐஸ்வர்யா ராய் மோகன் பிரபு கீர்த்தி சுரேஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

ஐஸ்வர்யா ராய் நடந்த கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் நடிப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

 மலையாள செய்தி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ஜெயராம் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது அதில் முக்கிய வேடத்தில் தான் நடிப்பதாக கூறியுள்ளார்.

விக்ரம் மனம் திறந்து நானும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார் கலை இயக்குனராக தோட்டாதரணி ஒப்பந்தம் ஆகியுள்ளார்

டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என முடிவு செய்து உள்ளனர். இதற்கான பணிகள் மும்முரமாக நடக்க இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமில்லை தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் ஆகிய மொழியில் உருவாக இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ருபாய். 800/- கோடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்யராஜ் திடிரென்று விலகியிருக்கிறார். பழுவேட்ரையார் வேடத்திற்கு இப்போது நடிகர் பிரபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!