இன்றைய முக்கிய செய்திகள்

நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிந்த நிலையில் முகிலன்,விஸ்வநாதன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

‘தமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்‘ டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

சென்னை, அண்ணா நகர் ZAITOON உணவகம் மற்றும் அதன் பிற கிளைகளில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை – ஆந்திரா எல்லையில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை!

பேனர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு விலக்கு அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மேல்முறையீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!