ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் .சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் .சிதம்பரம் மனு தாக்கல்.

.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான .சிதம்பரம் 25 நாட்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்சி.பி. சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டார் துஷார் மேத்தாவும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த வழக்கில் .என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தால் பல லட்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. அவருக்கு   ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும். – துஷார் மேத்தா

நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் வழங்கினார். அப்போது சிபிஐ வாதத்தை ஏற்ற நீதிபதி, .என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் .சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் அவர் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!