அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை

அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை


கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம் 5 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு செப். 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை என்று கூறியிருந்தது.


தற்போது இந்த வேலையில்லா நாள்களை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1, 8, 9 ஆகிய நாள்கள் எண்ணூர் தொழிற்சாலைக்கு வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

இந்த வேலையில்லா நாட்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியங்கள் அசோக் லேலண்ட் ஊழியர் சங்கத்துடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி உயர்வால் வாகனங்களின் விலை உயர்ந்ததால் விற்பனை குறைந்தது என்று இந்நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் விற்பனை மந்தநிலையை போக்கும் விதமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!