இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ப்ரதமர் நரேந்திர மோடி ! | தனுஜா ஜெயராமன்

 இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ப்ரதமர் நரேந்திர மோடி ! | தனுஜா ஜெயராமன்

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது பத்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு போட்டிக்கு சீல் வைத்துள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில் இன்றைய போட்டியில் தனி ஒருவராக முகமது ஷமி மிகச்சிறப்பாக பந்துவீசி நமது அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள் என முகமது ஷமியின் பெயரை குறிப்பிட்டு ஒரு பதிவினையும் மோடி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...