“நினைவெல்லாம் நீயடா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! | தனுஜா ஜெயராமன்
நடிகர் பிரஜன் மற்றும் மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில், ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி வரும் படம் “நினைவெல்லாம் நீயடா”.
இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.
இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மனோபாலா, முத்துராமன், மதுமிதா, ரஞ்சன் குமார், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், தமிழ்செல்வி ஆகியோரும் நடித்துள்ளனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார்.
முதல் காதலை கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல், 96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா’.
இந்நிலையில் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கௌதம் மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களால் நாளை காலை வெளியிடப்பட உள்ளது.