பிக்பாஸ் வீட்டில் அதுவும் முதல் வாரத்திலேயா? | தனுஜா ஜெயராமன்

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில், எப்போதும் முதல் வாரம் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ” என்று ஆடிப்பாடுவது தான் வழக்கம் . ஆனால் இந்த சீசனில் முதல் வாரமே சண்டை சச்சரவுக்கும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 3வது நாளே பரபரப்பை உண்டாக்கும் டாஸ்க்கள்  வழங்கப்பட்டுள்ளது.

மாயா கூல் சுரேஷை வம்புக்கு இழுக்க அவரோ கூலாக நழுவிச்

செல்ல வாயைக் கொடுத்து வகையாக மாட்டிக்கொண்டதென்னவோ விஷ்ணு தான்.

அதன் பிறகு போட்டியாளர்கள் தொலைக்காட்சி நேரலையில் பேசுவது போல டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விஷ்ணு விஜய் மற்றும் மாயா கலந்து கொள்கின்றனர். அப்போது மாயா நான் கமல் சார் உடன் நடித்து இருப்பதாக சொல்லி தான் பாபுலர் என வாதிட ஏற்கனவே  டென்ஷனில் இருந்த விஷ்ணு மேலும் டென்ஷனாக உங்களுக்கு எப்படி நிறைய வியூஸ் வரும் என நினைக்கிறீர்கள் என உளறிக்கொட்டி பேசி வைக்கறார்.

சக போட்டியாளர் பிரதீப் சொல்ல வரும் கருத்தை நீங்க கேட்பதாகவே இல்லை அப்பறம் எப்படி உங்களுக்கு வியூஸ் வரும் என விஷ்ணு கேட்க, அவன் என்ன எனக்கு மாமாவா மச்சானா நான் ஏன் அதனை செய்ய வேண்டும் என மாயா கேட்கிறார். பின் விஷ்ணுவிடம் விசித்ரா நீங்க இந்த முறை எதோ பர்சனல் வைத்து கொண்டு பேசுவதாக சொல்கிறார். இப்படி முதல் வாரமே பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லாமல் துவங்கி இருக்கிறது.

அதன் பிறகு பவா அவர்கள் ஒரு கதையை சொல்ல அதில் சக போட்டியாளர்கள் சிலருக்கு சந்தேகங்கள் குழப்பங்கள். பிரதீப்போ பவாவிற்கு சப்போர்ட் பண்ணுவதாக நடித்து அவரை போட்டு்க் கொடுப்பதாக தோன்றியது.

நீங்கள் பொது இடத்தில் எச்சை துப்பினால் உங்களை சீக்கீரம் அனுப்பிடுவாங்க ஆனா எனக்கு நீங்க வேணும் என நைஸாக ஊசி ஏற்றி எச்சரித்தார்.

“அதையே உல்டாவாக நீங்க நாமினேட் பண்ணுவீங்கல்ல அவரை ” என மறைமுகமாக உசுப்பேற்றியதாக தோன்றியது.

ப்ரதீப் ஆரி போல இருப்பதாக நினைத்து விளையாட அசீம் போல விளையாடுவதாக தோன்றுகிறது.

எச்சை துப்பும் விஷயத்திற்கு பவாவோ ஒரு பொறுப்பான பதிலை சொல்லாமல் “நான் யாருக்காகவும் என்னை மாத்திக்கமாட்டேன்” என பொறுப்பற்று பதில் சொன்னார். நான் பிக்பாஸ்க்கு வந்ததே என் டார்க் சைடை தெரிந்து கொள்ள என்கிறார். இந்த முரண்பாடான பதிலில் வெறுமனே தெரிந்து கொள்ள மட்டும் தானா ? திருத்தி கொள்ள இல்லையா? என்கிற கேள்வி எழும்பாமல் இல்லை.

கடைசி ஹைலைட்டாக நான் தலைவராக ஹெல்ப் பண்ணுவியா? என விஷ்ணு கேட்க… நான் சொல்ற ஆறு பேரை ஸ்மால் வீட்டுக்கு அனுப்புவியா? என்கிற ப்ரதீப்பின் வரலாற்று ஒப்பந்தம் அங்கே நிறைவேறியது. அனேகமாக இந்த சீசனின் விஷபாட்டில் ஒரு ஆணாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆண்களில் விக்ரம் சரவணன் இயல்பாக மெச்சூர்டாக திறமையானவராக தெரிகிறார். பார்க்கலாம்  நாளை என்ன சுவராஸங்கள் என்பதை.. !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!