பாஜக மேலிடத் தலைவர்கள் தான் என கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள் – பாஐக மாநில தலைவர் அண்ணாமலை! | தனுஜா ஜெயராமன்

பாஜக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் “கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்” என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முதலில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால் அவர் இல்லாமலேய. கூட்டம் துவங்கிய நிலையில் அண்ணாமலை லேட்டாக வந்து கலந்து கொண்டார்.

அதன்  பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களது விருப்பம். பாஜக தேசிய தலைமையிடம் எனது கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். டெல்லியில் உள்ள பாஜக மேலிடத் தலைவர்கள் தான் என கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். ஜனவரியில் என் மண் என் மக்கள் நடைபெற உள்ள நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!