” அந்தமான் ” கருணாநிதி அவர்களை சந்தித்து ஆலோசனை….!!

 ” அந்தமான் ” கருணாநிதி அவர்களை சந்தித்து ஆலோசனை….!!

அந்தமானில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் இணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் கிளை அமைப்பாக அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்கள் !

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி, ” தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கு, அந்தமான் தோழர்களை இணைக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது ” என்றும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் கே.ரமேஷ் குமார் & புதுச்சேரி மாநில யூனியன் தலைவர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் தோழர் எம்.பி.மதிமகாராஜா ஆகியோர் இணைந்து அந்தமான் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பார்கள் ” என்று அறிவித்தார் தோழர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி !

விரைவில் இது குறித்து ஆலோசனை செய்ய அந்தமான் மனித உரிமை தலைவர், சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் குரல் இதழின் துணை ஆசிரியருமான ” அந்தமான் ” கருணாநிதி அவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது !

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

கி.அருண் குமார்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
தென் சென்னை
செய்தி தொடர்பாளர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...