தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின

 தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் 💐இன்று (ஆகஸ்ட் 19).👀

🇭🇷 சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள்.

🇭🇷 சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன.

🇭🇷சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.

🇭🇷 காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936-ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார்.

🇭🇷சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். 1942-ல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

🇭🇷 இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்டவர் சத்தியமூர்த்தி,

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...