பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!

 பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!

பரபரப்பான சூழலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். மல்யுக்த வீராங்கனைகளால் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் இதில் போட்டியிடுவது பெரும் பரபரப்பினை கிளப்பி வருகிறது.

தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் குமார் சிங் (உத்தர பிரதேசம்) மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன் ஆகியோர் உள்ளனர்.

துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் கர்தார் சிங் போட்டியிடுகிறார். இவர் ஆசிய போட்டிகளில் இரணடு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

இவர் தவிர அசித் குமா சகா் மேற்கு வங்காளம் , ஜெய் பிரகாஷ் டெல்லி, மோகன் யாதவ் மத்திய பிரதேசம், போனி மணிப்பூர்ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இதேபோல் 2 இணை செயலாளர் பதவிகளுக்கு 4 பேரும், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் போட்டியிடுகிறார்கள்.

பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 5 முக்கிய பதவிகளுக்கான போட்டியில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...