ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த தினமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவார்கள்.

இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்யவும் 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சாமி தரிசனம் செய்தவுடன் மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!