திருப்பதி திருமலையில் புணரமைப்பு பணிகள் தீவிரம்…!

 திருப்பதி திருமலையில் புணரமைப்பு பணிகள் தீவிரம்…!

திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் தெப்பக் குளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருக்கோயில் திருக்குளத்தில் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து இருக்கிறது.

திருப்பதியில் தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழக்கம். அவர்கள் அனைவரும் திருகோவில் குளத்தில் புனித நீராடி ஏழுமலையானை வழிபடுவதும் வழக்கம்.

திருமலை திருப்பதி கோயிலில் இரண்டு பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெற உள்ளன.

செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோத்ஸவமும், அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோத்ஸவப் பெருவிழாவும் நடைபெற உள்ளன.

இந்த இரு பிரம்மோத்ஸவப் பெருவிழாக்களை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட உள்ளது.

அதன்படி, கோயில் தெப்பக் குளத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, திருக்குளத்தின் தரைப் பகுதி மொத்தமும் சுத்தம் செய்யப்பட உள்ளது.

திருக்கோவில் குளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் குழாய் இணைப்புகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளும் சீர் செய்ய பட உள்ளதாம்.

திருக்கோயில் தெப்பக் குளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் திருக்குளத்தில் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து இருக்கிறது.

மேலும், இந்தத் தடை ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் எனவும் தேவஸ்தான போர்டு தெரிவித்து இருக்கிறது.

இந்த தடை இம்மாதம் 31ம் தேதி வரை கோயில் திருக்குளத்தில் பக்தர்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...