நிழல் இல்லாத நாள் – மாணவர்கள் பார்த்து ரசித்தனர்

 நிழல் இல்லாத நாள் – மாணவர்கள் பார்த்து ரசித்தனர்

சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் பூஜ்ய நாள் (Zero Shadow Day) ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகிய வற்றைக் கண்டறியலாம்.

சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல், காலையில் அதிக நீளத்தோடு இருந்து, உச்சி நேரத்தில் குறையும். பின், சூரியன் மறையும் வரை, மீண்டும் நீள்கிறது. அதேநேரம், ஓராண்டில் இரு முறை, சூரியனால் ஏற்படும் நிழலைக் காண இயலாது.அவ்வகையில், ஒரு பொருளின் நேர் மேலாக, 90 டிகிரி உச்சியில், சூரியன் வரும் நிகழ்வு, பூஜ்ஜிய நிழல் தினமாக அழைக்கப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் பூமியின் விட்டத்தைக் கண்டுபிடித்தனர். தமிழகத்தில் 25-8-2022 அன்று பிற்பகல் 12:23 மணிக்கு பூஜ்ஜிய நிழல் நிகழ்வு ஏற்பட்டது.

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின் றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்குக் கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழலாகத் தெரியாததை மாணவர்கள், பொதுமக்கள்  ஆச்சரியத் துடன் பார்த்தனர். விடுமுறை  நாளாக  இருப்பதால் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளைப் பார்த்து அதன் அறிவி யல் விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தங்களைச் சுற்றி யுள்ள பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கிக் கூறினார்கள்.

நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி  ஆகியோர்  மாணவர்களுக்குக் கொடுத்த தகவலில், ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்குச் சமமாக மாறும்போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியக் கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று  நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்குக் கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது.’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில்கொண்டு  மாணவர்கள் முத்தய்யன், திவ்யஸ்ரீ, தேவ தர்ஷினி, யோகேஸ்வரன் ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை  வடிவப் பொருளை வைத்து செய்து பார்த்தனர். தங்களின் நிழல் தங்களுக்குத் தெரியாததைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக் கூறினார்கள்.

தங்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனைச் செய்து காண் பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதலப் பதிவுகள், தகவல்கள் தங்களுக்கு நல்ல உதவியாக இருந்த தாகக் கூறினார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...