ஆஞ்சநேய ஜெயந்தி – வழிபாடும் பலன்களும்

 ஆஞ்சநேய ஜெயந்தி – வழிபாடும் பலன்களும்

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்கு வதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளை யும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனை வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஜனவரி 2ஆம் தேதி மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் அன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

மார்கழி மாதம் என்று சொன்னாலே சிறப்பு தான். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில், அனுமன் ஜெயந்தியும் சேர்ந்து வரு கின்றது.  ஹனுமன் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது ராமாயணம். அனுமனைப் போல ஒரு தொண்டனை, உண்மையான பக்தனை இந்த உலகத்தில் காண முடியாது என்று எம்பெருமானே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்த காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள, முயற்சியில் வெற்றி பெற, எண்ணிய காரியம் எல்லாம் ஈடேற ஹனுமன் வழிபாடு மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகச் சொல் லப்பட்டுள்ளது. வானளாவிய பெருமைகளைக் கொண்ட ராம பக்தரான அனுமனின் ஆசிர்வாதத்தைப் பெற நாளைய தினம் சுலபமான முறையில் அனுமன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

எப்போதும்போல நாளைய தினம் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட வேண்டும். பூஜை அறையில் அனுமனின் திருவுருவப் படம் இருந்தால் அதைச் சுத்தமாகத் துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கட்டாயம் இரண்டு துளசி இலைகளை அனுமனுக்கு பூஜையில் வைக்க வேண்டும்.

அதன்பின்பு வெற்றியைத் தரும் வெற்றிலை பூஜைக்கு அவசியம் தேவை. 11, 21 என்ற ஒற்றைப்படை கணக்கில் உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை வெற்றிலை களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் செந்தூரமும் நமக்குத் தேவை. செந்தூரத்தில் தண்ணீர் ஊற்றி கலந்து, மோதிர விரலால் அந்தச் செந்தூரத்தைத் தொட்டு, வெற்றிலையின் நடுவே ‘ராம’ என்ற வார்த்தையை எழுதி வெற்றிலையைச் சுருட்டி மாலையாகக் கட்டி, உங்கள் வீட்டில் இருக்கும் அனுமனின் திருவுருவப் படத்திற்குப் போடலாம்.

அனுமனின் திருஉருவப்படம் வீட்டில் இல்லை என்றால், ராமபிரான் திருவுருவப் படத்திற்கு இந்த மாலையைப் போட்டு வழிபாடு செய்யலாம். எந்தப் படமும் வீட்டில் இல்லாதவர்கள் இந்த மாலையை அப்படியே பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களால் முடிந்த நிவேதனத்தை அனுமனுக்கு செய்து வைக்கலாம். குறிப்பாக நாளைய தினம் அனுமன் ஜெயந்தியாக சிறப்பான நிவேத்யம் என்றால் அது வடை. உளுந்து மிளகு சேர்த்த உளுந்த வடை செய்து அனுமனுக்கு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து சிறிதளவு வெண்ணையையும் நிவேதனமாக வைக்க வேண்டும்.

அனுமனுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய பிரார்த்தனையை மன தார வைத்துக்கொண்டு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இறுதியாக நீங்கள் தொடுத்து வைத்திருக்கும் வெற்றிலை மாலையை எடுத்துக்கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் கோவிலில் இருக்கும் அனுமன் சிலைக்கு மாலையாக போட்டுவிட வேண்டும்.

நீங்கள் என்ன நினைத்து வேண்டி இந்த மாலையில் ‘ராம’ என்ற மந்திரத்தை எழுது கிறீர்களோ, நீங்கள் என்ன நினைத்து இந்த மாலையை தொடுக் கிறீர்களோ, அந்த வேண்டுதல் நிச்சயமாக கூடிய விரைவில் நிறைவேறும்.

நாளைய தினம் பூஜை அறையில் அமர்ந்து அனுமனுக்கு உகந்த மந்திரங் களை உச்சரிக்கலாம். மந்திரம் தெரியாதவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை நாளைய தினம் முழுவதும் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு மிக மிகப் பிடித்த பகுதி என்றால் அது சுந்தர காண்டம். வாய்ப்பு உள்ள வர்கள் நாளை ஒரு முறை சுந்தர காண்டத்தை படித்தீர்கள் என்றால், அனுமன் மனம் மகிழ்ந்து நீங்கள் வேண்டிய வரங்களை கொடுத்து விடுவார்.

அமாவாசையும் அனுமன் ஜெயந்தியும் நாளையதினம் சேர்ந்து வரவிருப்ப தால், எந்த நேரத்தில் ஹனுமன் வழிபாடு செய்வது என்ற குழப்பம் நிச்சயம் எல்லோருக் கும் இருக்கும். நாளை தினம் காலை நேரத்தில் அனுமன் வழிபாடு செய்வது சிறப்பு. முடியாதவர்கள் மாலை 6 மணிக்கும் அனுமன் வழிபாட் டினை மேற்கொள்ளலாம். அனைவருக்கும் ஹனுமனின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்வோம்.

ராமபிரான், ராவணனுடனான யுதத்தத்தில் வெற்றி காண்பதற்கு, பக்கபலமாக இருந்தவர் அனுமன். ராவணனின் இருப்பிடத்தில் சீதை இருப்பதை, அனுமன் தான் அங்கு சென்று உறுதிப்படுத்தி வந்தார். ராவணப் படைக்கு எதிராகப் போரிட, ராம பிரானின் பக்கத்தில் சுக்ரீவனின் வானரப் படைகளை இணைக்க பாலமாக இருந்தார். ராவணனின் மகன் மேகநாதன் எய்த அம்பால் மூச்சையாகிப் போன லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் தேவைப்பட்டபோது, உரிய நேரத்தில் சென்று அந்த மலை யையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன்.

இப்படி ராமபிரானுக்குப் பல வகையில் பலமாக அமைந்தவர், அனுமன். அவருடைய ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறை வேறும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். ஆஞ்ச நேயரை அவருடைய நாமத் தைச் சொல்லி வணங்குவதைவிட, ராமபிரானின் நாமத்தைச் சொல்லி வணங்குவதே அதிக பலனைத் தரும். ராம… ராம… ராம…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...