‘தேசத்தின் நண்பன்’ தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

இந்திய  விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் தேசபந்தன் சித்தரஞ்சன் தாஸ். மக்களால் தேசத்தின் நண்பன் என்று அன்புடன் அழைக்கப்பட்டது தேசபந்தன். இவர் பிறந்த நாள் இன்று (நவம்பர் 5, 1870).

1909ல்  அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில்  அரவிந்தருக்கு  ஆதரவாக வெற்றிகரமாக வாதாடி மீட்டார். இவர்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  அரசியல் குரு. அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.

கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சாதி வேற்றுமை யையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

மேற்குவங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர்  1919-1922  காலப் பகுதி யில்  ஒத்துழையாமை இயக்கத்தில்  சேர்ந்து  பிரிட்டனின்  ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார்

வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் இவர் மாணவப் பருவத்திலேயே விடுதலை இயக்கங்களில் கலந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1894-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பூபன் மோஹன் தாஸ் கொல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். பூபன் தாஸ் பிரம்ம சமாஜத்தில் தீவிர நம்பிக்கை உடை யவர். மிகுந்த நாட்டுப்பற்று உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப் பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன் தாஸ் அவரது முதல் மகன். அவருக்கு ஒரு தமக்கை உண்டு. சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1890-இல் இங்கிலாந்து சென்று இந்தியக் குடிமைப் பணி தேர்வு எழுதினார். இந்தியா திரும்பி 1894-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்ற ஆரம்பித்தார். அவரது இளைய சகோதரர் பி.ஆர்.தாஸ் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். வங்கப் பிரிவினையின்போது அரவிந்தர், பிபின் சந்த்ர பாலுடன் இணைந்து “வந்தே மாதரம்” என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.

ஸ்ரீஅரவிந்தருடன் தாஸ்

அரவிந்தரும் சித்தரஞ்சன் தாஸும் சுதந்திரப் போராட்டப் புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத் தலைவர்களாக இருந்தனர். இவ்வியக்கம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கிழக்கிந்தியாவின் ஆயுதம் ஏந்திய இயக்கமாகும். ஆயுதப் புரட்சி மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே இதன் குறிக்கோள். ஜதீந்திரநாத் பானர்ஜி, ஜதீந்திரநாத் முகர்ஜி, யதீந்திர கோஷ் (அரவிந்தரின் இளைய சகோதரர்), ராஷ் பிஹாரி போஸ் ஆகியோர் இதன் முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

சித்தரஞ்சன் தாஸ் ஐரோப்பிய இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். அவர் சாகர் சங்கீத், நாராயண்மாலா, கிஷோர்-கிஷோரீ, அந்தர்யாமி போன்ற இலக் கியங்களை எழுதியுள்ளார். மேற்கத்திய கல்விமுறை ஆத்மா முன்னேற்றத்திற்குப் பயனற்றது என்று கருதினார்.

பிரம்ம சமாஜ நூல்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் நூல்கள் ஆகியவற்றை ஆழ்ந்து படித்தார். விவேகானந்தரின் கருத்துகள் இவரைக் கவர்ந்தன. புகழ் பெற்ற அறிஞர்களான பக்கிம் சந்திரர், D.L. ராய், கிரீஷ் கோஷ், இரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் நூல் களையும் அவர் ஆழ்ந்து படித்தார். எல்லோரும் கல்வி கற்க வேண்டியது அவசியம் என்று கருதினார்.

ரவீந்திரநாத் தாகூருடன் தாஸ்

ஈஷ்வர் சந்த்ர வித்யா சாகரின் விதவை மறுமண இயக்கத்திற்கு உதவினார். அவர் 1890-லிருந்து 1894 வரை இங்கிலாந்தில் இருந்த காலத்தில் தாதாபாய் நௌரோஜிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஜான்மெக்கலன் என்பவரின் இந்திய விரோதப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கிளாட்ஸ்டோன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசினார். அரவிந்த ரின் அலிப்பூர் குண்டு வழக்கில் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார். அதனால் அவரது புகழ் பரவியது. தும்ரோன் அரசரின் தத்தெடுப்பு குறித்த வழக்கிலும் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறாக அவர் சிவில், கிரிமினல் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

சிந்தரஞ்சன் தாஸ் சிலை

1920-ல் சித்தரஞ்சன் தாஸின் மாத வருமானம் ரூ.50,000. அவரது தந்தை தாராள குணத்தாலும், ஆடம்பரத்தாலும் திவாலாகி இருந்தார். 1913-ல் தாஸ் தனது தந்தையின் கடன்களை அடைத்தார். 1921-ஆம் ஆண்டு விக்ராம்பூரில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டு அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றம், அஸ்ஸாம்-வங்காள ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்றவற் றிலும் கவனம் செலுத்தினார்.

1921-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தேசத் தொண்டாற்றுவதற்காகப் புகழ்பெற்ற, வழக்கறிஞ ரான தாஸ் தனது தொழிலைத் துறந்தார். அவரது இந்தத் தன்னலமற்ற தியாகம் நாடு முழுவதும் அவருக்கு இருந்த நன்மதிப்பை அதிகரித்தது.

வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சித்தரஞ்சன் தாஸ் மனைவி பசந்தி தேவி, மகன் சிரா ரஞ்சன், சகோதரி ஊர்மிளா தேவி, கிரண் சங்கர் ராய், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1922-ல் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதால் காங்கிரஸி லிருந்து விலகி சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கினார்.

1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி காந்திஜியை எதிர்த்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் சுயராஜ்ஜியக் கட்சி தொடங்கப்பட்டது. இதில் முக்கியமானவர்கள், சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, நரசிம்ம சிந்தாமன் கேல்கர், ஹூசேன் சாஹித் ஜராவார்டி (பின்னாளில் பாகிஸ்தான் பிரதமராகப் பணிபுரிந்தார்), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விதால்பாய் படேல் (வல்லபாய் படேலின் மூத்த சகோதரர்.)

சுபாஷ் சந்திரபோஸின் தேசப்பணிகளால் கவரப்பட்ட விதால்பாய் படேல் அவரது ரூ.1,20,000 மதிப்புடைய சொத்தை போஸின் தேசப் பணிகளுக்காகக் கொடுத்தார். ஆனால் காந்திஜி அந்தத் தொகையை காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கேற்பதான் செலவிட வேண்டும் என்றார். போஸ் மறுத்ததால் வழக்கு நீதிமன்றம் சென்றது. உயில் தெளிவாக இல்லாததால் போஸ் அந்தத் தொகையை இழந்தார்.

இவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் அரசாங்கத் தின் நியாயமற்ற கொள்கைகளை எதிர்க்க நினைத்தார்கள். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து சுதந்திரம் பெற்று சுயராஜ்ஜியம் அமைப்பதே மேற்கண்ட வர்களின் குறிக்கோள். சித்தரஞ்சன் தாஸ் ‘ஃபார்வார்டு’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து சுபாஷ் சந்திரபோஸிடம் ஒப்படைத்தார்.

சுபாஷ் சந்திரபோஸ்

1924-ஆம் ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ் ஜியக் கட்சி வெற்றி பெற்றது. மாநகராட்சி மேயராக சித்தரஞ்சன் தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக சுபாஷ் சந்திரபோஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா மாநகராட்சி யில் பல சீர்திருத்தங்களைச் செய்து மக்களிடம் பேராதரவைப் பெற்றனர். சிறந்த செயல் பாட்டால் 1925-ஆம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1925-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55-ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் கொல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

சித்தரஞ்சன் தாஸ் இல்லம்

சித்தரஞ்சன் தாஸ் இல்லம் ‘சித்தரஞ்சன் சேவாசதன்’ என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.  சித்தரஞ்சன் தன் ஈகை குணத்தால் தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதிவைத்தார். அவர் தியாகம் என்றும் வாழும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...