செய்தித்துளிகள்!

‘ஃபைசாபாத்’ ரயில் நிலையத்தை ‘அயோத்தியா கண்டோன்மேண்ட்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டமாக பெயர் மாற்றம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மட்டன் பிரியாணிக்காக வேனை நிறுத்திய போலீஸ்!

நடந்தது இதுதானாம்!

பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 7 பேரையும், கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு போலீஸார் சேலம் திரும்பினர்.

வரும் வழியில் விதிமுறைகளை மீறி கைதிகளை, அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்த விசாரணையில், பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்களின் உறவினர்கள் வீட்டிலிருந்து சமைத்து கொண்டு வந்த மட்டன் பிரியாணியை எப்படியாவது கொடுக்க வேண்டும் என நச்சரித்தனர்.

நாங்கள் சம்மதிக்கவில்லை. பின்னர் ரொம்பவே நச்சரித்தனர். வழியில் ஓரிடத்தில் நிறுத்துவோம் பார்சலைக் கொடுங்கள் என்றோம். அப்படி நிறுத்திய போது பார்சலை கொடுத்தனர்.

வெறும் 7 நிமிடங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கைதிகளை சிறைக்கு கொண்டு வந்து விட்டோம் என்று கூறியுள்ளனர்.

பிரியாணிக்கு சபலப்பட்டு சஸ்பெண்ட் ஆனதால் இப்போது சங்கடத்தில் உள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!