அ.வெண்ணிவுக்குப் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது.

தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு
 ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ம், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
கவிஞர் அ.வெண்ணிலா, கவிஞர் வைரமுத்து, வேந்தர் பாரிவேந்தர், தவத்திரு பொன்னம்பல
அடிகளார் ஆகியோர் உள்ளனர்.

சென்னை  காட்டங்குளத்தூரிலுள்ள  எஸ்.ஆர்.எம்.  பல்கலைக்கழகத்தில்  க்டோபர் 21  நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழா வில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன.

     இவ்விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரு மான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றி னார்.

    திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ‘கங்காபுரம்’ எனும் வரலாற்று நாவலை எழுதிய அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித் தன் படைப்பிலக்கிய விருரதினை’யும், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தை யும் வழங்கி கவுரவித்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விழாப்பேருரையாற்றினார்.

     இவ்விழாவில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இணைவேந்தர் இரவி பச்சமுத்து, தலைவர் சி.நிரஞ்சன், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, துணைவேந்தர் செ.முத்தமிழ்ச்செல்வன், பேராசிரியர்கள் பா.ஜெய் கணேஷ், தி.ஞா.நித்யா, வே.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...