சூர மாஸ்!.. “GVM-ARR-STR”-ன் புதிய படத்தில் ‘2.O’, ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்

 சூர மாஸ்!.. “GVM-ARR-STR”-ன் புதிய படத்தில் ‘2.O’, ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்

கவுதம் வாசுதேவ் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இந்த ட்ரீம் டீம் மீண்டும் இணைந்துள்ள ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் புதிய அப்டேட் தெரியவந்துள்ளது.

எஸ்.டி.ஆர், ஜி.வி.எம்., ஏ.ஆர்.ஆர், தாமரையின் மாஸ் காம்போவில் உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தாக்கத்தில் இருந்தே இன்றுவரை எழாத ரசிகர்களுக்கு, தற்போது தாமரை எழுதிய பாடல் வரிகளில் டைட்டில் வைக்கப்பட்டுள்ள ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த காம்போவில் மேலும் ஒரு வண்ணமாக, மேலும் வலுசேர்க்கக் கூடிய வகையில் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், இந்த படத்தில் பிரபலமான எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்க்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் இந்த படத்தின் எழுத்து பணிகளில் இடம்பெறுவதாக நமக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...