வரலாற்றில் இன்று – 10.11.2020 உலக அறிவியல் தினம்

ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார்.

1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

இதன் உச்சநிலையாக, 1947ஆம் ஆண்டு ஏகே-47 வகை தாக்குதல் துப்பாக்கியை உருவாக்கினார். இதன்பின் கலாஸ்னிக்கோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

கலாஸ்னிக்கோவ் இருமுறை சோசியலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் பிறந்தார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சோவியத்தின் லூனா 17 விண்கலம் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது.

2013ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தமிழக எழுத்தாளர், புஷ்பா தங்கதுரை மறைந்தார்.

1697ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!