வரலாற்றில் இன்று – 14.09.2020 சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்

உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலைசிறந்தே விளங்கி வருகிறது. இதை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஹிந்தி தினம்

இந்திய அரசு ஹிந்தியை ஆட்சி மொழியாக, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஏற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தியை பரப்பும் வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் ஹிந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. வில்லியம்

பெண்டிங் பிரபு

பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.

இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.

வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு பிரான்சில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1917ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ரஷ்யா அதிகாரப்பூர்வ குடியரசானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!