வரலாற்றில் இன்று – 23.08.2020 சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23ஆம் தேதி வரை போராடினர்.

அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

டி.எஸ்.பாலையா

தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி தன்னுடைய 57வது வயதில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது.

1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜப்பானிய மொழியையும், தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ (Susumu Ono) டோக்கியோவில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!