கார்த்திக் டயல் செய்த எண்… – சிறப்பு குறும்படம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கெளதம் மேனன், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.

அது குறித்து அவர் அப்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில், இந்தப் படத்தை தயாரித்து இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்

கதைப்படி, முதல் பாகத்திலிருந்து எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டதாகக் கதைக்களம் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுண் காலத்தில் வீட்டிலிருந்தபடியே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.

அதற்காக எப்படி செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும் என அவர் த்ரிஷாவிற்கு கற்றுக் கொடுக்க, அந்த வீடியோவை த்ரிஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் நாயகன் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் இப்போது இயக்குநர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் குறித்தும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்து பேசுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குறும்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!