யாதுமாகி நின்றவள் பெண்ணே
அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றே//
தடுத்து வைத்திட்டார் முன்னொரு காலத்தில்//
உயர்கல்வி பெற்றே உயர்ந்தார் பெண்டீர்//
உயர்பதவியும் அடைந்தே வையத்தில் சிறந்தார்//
தலைமை அமைச்சராக நாட்டையும் நடத்தி//
தலை நிமிர்ந்து நின்றாரே பலர்//
உள்ளூர் மட்டுமன்றி உலகச் சபையினிலும்//
முக்கிய பதவியில் முன்னேறி முடிசூடினர்//
சரிசமமாய் பதவிகளை அடைந்தே சகலற்கும்//
புரியவைத்தார் நிர்வாகத் திறமைகளில் உயர்ந்தே//
உவமையேதும் இல்லாததாய்
பெண்மையின் தாய்மை//
இல்லையெனில் ஏது
ஆண்மையின் ஆளுமை//
மஞ்சுளா யுகேஷ். துபாய்

