போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை: ​போருரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​காக, நவீன ரோபோடிக் தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம், ‘டா வின்சி எக்​ஸ்ஐ அட்​வான்​ஸ்டு ரோபோடிக் சர்​ஜிக்​கல் சிஸ்​டம்’ என்ற ரோபோடிக் தொழில்​நுட்ப கரு​வி​யின் பயன்​பாட்டை தொடங்கி வைத்​தார்.

இந்த நிகழ்​வில் ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம், துணை வேந்​தர் மருத்​து​வர் உமா சேகர், இணை துணைவேந்​தர் மருத்​து​வர் மகேஷ் வக்​க​முடி, மருத்​து​வக் கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.​பாலாஜி சிங், பதி​வாளர் மருத்​து​வர் எஸ்​.செந்​தில் குமார்.

மருத்​துவ இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.பி.சு​தாகர் சிங், மருத்​துவ கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் பி.சுரேந்​திரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இந்த ரோபோடிக் கரு​வி​யில் அறுவை சிகிச்சை நிபுணருக்​கான கட்​டுப்​பாட்டு கன்​சோல், நோயாளி​யின் பக்​கத்​தில் 3 முதல் 4 ரோபோடிக் கரங்​களை கொண்ட கார்ட் மற்​றும் 3டி எச்டி மற்​றும் அறுவை சிகிச்சை நிபுணரின் கை அசைவு​களை உடனுக்​குடன் துல்​லிய​மாக பிர​திபலிக்க ஃபோர்ஸ் ஃபீட்​பேக் உயர்தொழில்​நுட்​பம் உள்​ளது.

சிக்கலான அறுவை சிகிச்சைகள் சாதாரண அறுவை சிகிச்​சை​யுடன் ஒப்​பிடு​கை​யில் இந்த ரோபோடிக் தொழில்​நுட்​பத்​தால் நோயாளி​கள் விரை​வாக குணமடைய​லாம்.

சிறிய அளவு காயங்​கள், குறைந்த நோய் தொற்​றுடன், மருத்​து​வ​மனை​யில் குறைந்த நாட்​கள் இருப்​பது போன்ற பலன்​கள் கிடைக்​கின்​றன. புரோஸ்​டேட் அகற்​று​தல், கருப்பை அகற்​று​தல், கொலோரெக்​டல் அறுவை சிகிச்சை மற்​றும் இதய மார்பு அறுவை சிகிச்சை உள்​ளிட்ட பல சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை துல்​லிய​மாக செய்​வதற்கு பயன்​படு​கிறது என்று தெரி​விக்கப்பட்டுள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!