டாடா மோட்டார்ஸ் சொகுசு வாகன உற்பத்தி ஆலை: முதல்வர் தொடங்கி வைத்தார்

அரக்​கோணம்: பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ரூ.900 கோடி மதிப்​பீட்​டில் டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் ‘ஜாகு​வார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாக​னங்​களின் உற்​பத்தி ஆலையை (முதல் அலகு) முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

ராணிப்​பேட்டை மாவட்​டம் பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில், ரூ.9,000 கோடி முதலீட்​டில் டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் ‘ஜாகு​வார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாக​னங்​களின் உற்​பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்​.28-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​யிருந்​தார்.

இதில், டாடா மோட்​டார்ஸ் (ஜேஎல்​ஆர்) நிறு​வனத்​தின் அதிநவீன வாகன உற்​பத்தி ஆலை​யின் முதல் அலகு ரூ.900 கோடி​யில் நிறு​வப்​பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்று தொழிற்​சாலையை திறந்​து​வைத்து பார்​வை​யிட்​டார். தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​பட்ட முதல் வாகன இயக்​கத்​தை​யும் தொடங்கி வைத்​தார்.

முன்​ன​தாக டாடா குழு​மத்​தின் முன்​னாள் முதல்​வர் ரத்​தன் டாடா​வின் உரு​வச்​சிலைக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். இவ்​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: டாடா குழு​மத்​துக்கு மட்​டு மின்றி தமிழகத்​துக்​கும் இன்​றைய தினம் ஒரு பொன்​னாள். ரூ.9,000 கோடி முதலீட்​டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் வழங்​கப்​படும் ஒரு திட்​டத்தை ராணிப்​பேட்​டை​யில் தொடங்​கியதற்​காக முதல்​வ​ராக நான் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

டாடா குழு​மத்​துக்​கும், தமிழ்​நாட்​டுக்​கும் ஆழமான உறவு உள்​ளது. மேலும், நாட்​டின் வாகன உற்​பத்தி மைய​மாக தமிழ்​நாடு உள்​ளது. மின்​வாகன உற்​பத்​தி​யின் தலைநகர​மாக நாம் விளங்​கு​கிறோம்.

பரவலான வளர்ச்சி: டாடா ஜே.எல்​.ஆர் தயாரிப்பு தமிழகத்​துக்கு மட்​டுமின்​றி, இந்​தி​யா​வுக்​கும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது. எல்லா மாவட்​டங்​களி​லும் சீரான, பரவலான மற்​றும் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சி​யடைந்த மாநிலம் தமிழ்​நாடு என்​பதை என்​னால் உறு​தி​யாக சொல்ல முடி​யும்.

டிப்​ளமோ முடித்த நம்​முடைய இளைஞர்​கள், இங்கு தேர்வு செய்​யப்​பட்​டிருக்​கிறார்​கள். இவர்​கள் எல்​லோரும், டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் ‘லட்​சி​யா’ என்ற திட்​டத்​தின்​கீழ் பயிற்சி பெறுகிறார்​கள். இந்த திட்​டத்​தில் வேலை செய்து கொண்டே பி.டெக் பட்​டம் பயில​வும், இந்த நிறு​வனம் உதவி செய்​கிறது.

நம் திரா​விட மாடல் அரசின் செயல்​பாட்டு திறனை உலகத்​துக்கு எடுத்​துச்​சொல்ல ‘முதலீடு​கள் செயல்​பாட்டு மாநாடு’ இன்​னும் சில நாட்​களில் நடை​பெற உள்​ளன. கிட்​டத்​தட்ட 100 திட்​டங்​கள் செயல்​பாட்​டுக்கு வர உள்ளன.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: டாடா குழு​மம் தனது பல்​வேறு தயாரிப்​பு​களை​யும், ஆராய்ச்சி மையங்​களை​யும் இங்கு தொடங்க வேண்​டுமென கேட்​டுக்​ கொள்​கிறேன். எங்​கள் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பை தரும் முதலீடு​களை யார் மேற்​கொள்ள வந்​தா​லும், அவர்​களை திறந்த மனதோடும், திறந்த கரங்​களோடும் நிச்​சய​மாக வரவேற்​கும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

முன்​ன​தாக டாடா சன்ஸ் நிறு​வனத் தலை​வர் சந்​திரசேகரன் பேசும்​போது, “தொழிற்​சாலை​யில் முதல் அலகினை தற்​போது தொடங்கி உள்​ளோம். 3 அலகு​களும் அடுத்த 4 ஆண்​டுக்​குள் முடிக்​கப்​பட்டு செயல்​படும். ஆண்​டுக்கு இரண்​டரை முதல் மூன்​றரை லட்​சம் வாக​னங்​கள் உற்​பத்தி செய்​யப்​படும்.

ஜே.எல்​.ஆர். வாகன உற்​பத்​தி​யில் சீனா, பிரேசில், அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களில் பட்​டியலில் இந்​தி​யா​வின் தமிழ்​நாடும் இணைந்​துள்​ளது” என்​றார். இவ்​விழா​வில் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, ஆர்​.​காந்​தி, டி.ஆர்​.பி.​ராஜா, அரக்​கோணம் எம்​.பி ஜெகத்​ரட்​சகன், எம்​எல்​ஏக்​கள் முனிரத்​தினம், ஈஸ்​வரப்​பன், ஏ.பி.நந்​தகு​மார், தலை​மைச்செயலர் முரு​கானந்​தம், வர்த்தகதுறை அரசு செய​லா​ளர் அருண்​ராய், சிப்​காட் நிறுவன மேலாண்மை இயக்​குநர் செந்​தில்​ராஜ், ராணிப்​பேட்டை ஆட்​சி​யர் சந்​திரகலா, டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் தலைமை நிதி அலு​வலர் பாலாஜி, மேலாண்மை இயக்​குநர் சைலேஷ் சந்​தி​ரா, ஜே.எல்​.ஆர். நிறு​வனத்​தின் இயக்​குநர் ப்ராங்க் லூத்​விக் உட்பட பலர் பங்​கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!