தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு பயிற்சி

சென்னை: தீ விபத்து ஏற்​பட்​டால் விரைந்து அணைப்​பது எப்​படி என தமிழகம் முழு​வதும் தனி​யார் காவலர்​களுக்கு தீயணைப்பு துறை​யினர் பயிற்சி அளித்​தனர்.

தீ விபத்து ஏற்​ப​டா​மல் பாது​காத்​துக் கொள்​வது, தீ விபத்து ஏற்​பட்​டால் தீயணைப்பு வீரர்​கள் விபத்து இடத்​துக்கு வரு​வதற்​குள் தீயை கட்​டுக்​குள் கொண்டு வரு​வது எப்​படி என குடி​யிருப்​பு​கள், மருத்​து​வ​மனை​கள், தொழிற்​சாலைகள், திரையரங்​கம், வணிக வளாகங்​கள், பள்​ளி​கள் போன்​றவற்​றில் பணிபுரி​யும் தனி​யார் காவலர்​களுக்கு தீ பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வு பயிற்சி தமிழகம் முழு​வதும் பிப்​.9-ம் தேதி நடத்​தப்​படும் என தமிழக தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை அறி​வித்​தது.

அதன்​படி, சென்னை அசோக் நகரில் உள்ள தீயணைப்பு நிலை​யத்​தில் நேற்று காலை நடை​பெற்ற இப்பயிற்்​சியை தீயணைப்​புத் துறை இயக்​குநரும், டிஜிபி​யு​மான சீமா அகர்​வால் தொடங்கி வைத்​தார். இதையடுத்து, தமிழகம் முழு​வதும் உள்ள 375 தீயணைப்பு நிலை​யங்​களி​லும் இந்த பயிற்சி நடை​பெற்​றது.

சென்​னை​யில் 1,500 பேர் உட்பட தமிழகம் முழு​வதும் 5 ஆயிரம் பேருக்கு தீ விபத்து ஏற்​ப​டா​மல் பாது​காத்​துக் கொள்​வது எப்​படி, தீ விபத்து நடை​பெற்​றால் அதை விரைந்து அணைப்​பது எப்​படி என தீயணைப்பு வீரர்​கள் பயிற்சி அளித்​தனர். இன்​றும் இந்த பயிற்​சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!