வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 24)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 24  கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார்.
1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது.
1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது.
1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.
1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 – உருசியா உதுமானியப் பேரரசு மீது போர் தொடுத்தது..
1895 – உலகத்தை தனியாளாக முதற்தடவையாக சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ் பாஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.
1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1915 – கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமானது.
1916 – 1915 இல் தென்முனைப் பெருங்கடலில் மூழ்கிய என்டூரன்சு கப்பலையும், அதன் மாலுமிகளையும் மீட்கும் பொருட்டு ஏர்னெஸ்டு சாக்கில்டனும் மேலும் ஐவரும் யானைத் தீவு என்ற ஆளில்லா தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
1916 – அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.
1918 – முதலாம் உலகப் போர்: தாங்கிகளுக்கிடையேயான முதலாவது சமர் இடம்பெற்றது. பூன்று பிரித்தானியத் தாங்கிகளும், செருமனியின் மூன்று தாங்கிகளும் போரில் ஈடுபட்டன.
1926 – செருமனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.
1933 – நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது.
1955 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1957 – சூயெசு நெருக்கடி: ஐநா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.
1961 – 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 – டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த உருசிய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1970 – காம்பியா பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது. தவ்தா யவாரா அதன் முதலாவது அரசுத்தலைவரானார்.
1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 – இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.
1993 – லண்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2004 – ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.
2005 – கர்தினால் யோசப் ராத்சிங்கர் கத்தோலிக்க திருச்சபை பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் 265-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2013 – வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1581 – வின்சென்ட் தே பவுல், பிரான்சிய மதகுரு, புனிதர் (இ. 1660)
1820 – ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை வடிவமைத்த சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)
1888 – விஷ்ணுராம் மேதி, இந்திய அரசியல்வாதி, விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1981)
1889 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1924 – எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டடக் கலைஞர், காந்தியம் அமைப்பைத் தோற்றுவித்தவர் (இ. 2015)
1929 – ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1933 – நொபொரு காராசிமா, சப்பானிய வரலாற்றாசிரியர், தமிழறிஞர் (இ. 2015)
1934 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (இ. 2015)
1934 – எல். கணேசன், தமிழக அரசியல்வாதி
1937 – சூலமங்கலம் ஜெயலட்சுமி, கருநாடக இசை, திரைப்படப் பின்னணிப் பாடகி
1941 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், வங்கியாளர், ஐநா தூதுவர் (இ. 2010)
1941 – சான் வில்லியம்சு, ஆத்திரேலிய-ஆங்கிலேய இசையமைப்பாளர், கித்தார் கலைஞர்
1944 – அருண் நேரு, இந்திய அரசியல்வாதி (இ. 2013)
1947 – ரோஜர் கோர்ன்பெர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
1951 – தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
1971 – குமார் தர்மசேன, இலங்கைத் துடுப்பாளர், நடுவர்
1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாலர்
1982 – கெல்லி கிளார்க்சன், அமெரிக்க நடிகை, பாடகி
1987 – வருண் தவான், இந்திய நடிகர்

இறப்புகள்

1622 – சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)
1731 – டானியல் டீஃபோ, ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், உளவாளி (பி. 1660)
1866 – அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன், வட இந்தியாவில் பணியாற்றிய சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர் (பி. 1803)
1924 – கிரான்வில் ஸ்டான்லி ஹால், அமெரிக்க உளவியலாளர் (பி. 1844)
1960 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1879)
1967 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (பி. 1927)
1976 – மார்க் டோபே, அமெரிக்க-சுவிட்சர்லாந்து ஓவியர் (பி. 1890)
2011 – சத்திய சாயி பாபா, இந்திய குரு (பி. 1926)

சிறப்பு நாள்

ஆர்மீனிய இனப்படுகொலை நினைவு நாள்
குழந்தைகள் நாள் (சாம்பியா)
குடியரசு நாள் (காம்பியா)
உலக ஆய்வக விலங்குகள் தினம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (இந்தியா)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!