இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 24)

உலக ஆய்வக விலங்குகள் நாள் இந்த நாள் ஆய்வகங்களில் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளின் துயரத்தை உணர்த்தவும், அவற்றிற்கான மாற்று முறைகளை ஊக்குவிக்கவும் நினைவுகூரப்படுகிறது. முக்கியத்துவம்: ஆய்வக விலங்குகள் (எலிகள், முயல்கள், குரங்குகள் போன்றவை) மருத்துவம், வேதியியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாளின் நோக்கம், விலங்குகளின் உரிமைகள் மற்றும் அவற்றின் துன்புறுத்தலைக் குறைக்க 3R கொள்கையை (Replacement, Reduction, Refinement) பரப்புவதாகும். செயல்பாடுகள்: கல்வி நிகழ்ச்சிகள், போராட்டங்கள் மற்றும் சமூக ஊடக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு விலங்கு சோதனைக்கு மாற்றான நுட்பங்கள் பற்றிய தகவல்கள் பகிரப்படுகின்றன. இந்த நாள் 1962ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் பல பிரபலமான நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் இதில் பங்கேற்கின்றனர். விலங்குகளின் வாழ்வுக்காக குரல் கொடுப்போம்!

தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) ஏப்ரல் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் ஊராட்சி முறை (பஞ்சாயத்து ராஜ்) முறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசால் அறிவிக்கப்பட்டது. முக்கியத்துவம்: 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது, இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. இந்த நாள் கிராமப்புறங்களின் ஜனநாயக மேலாண்மை, உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மற்றும் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. செயல்பாடுகள்: மத்திய & மாநில அரசுகள் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் சாதனைகளைப் பாராட்டி விழாக்கள் நடத்துகின்றன. உள்ளூர் தலைவர்கள், கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துரையாடல்கள், பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். சிறந்த பஞ்சாயத்துகள் மற்றும் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்பு: இது கிராமம், வட்டார் & மாவட்ட அளவில் மூன்று-அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது: கிராம பஞ்சாயத்து பஞ்சாயத்து யூனியன்/வட்டார் பஞ்சாயத்து மாவட்ட பஞ்சாயத்து (ஜில்லா பரிஷத்) இந்தியாவில் கிராமப்புற மேம்பாடு மற்றும் ஜனநாயகத்தின் அடித்தளம் பஞ்சாயத்து ராஜ் தான். இன்றைய நாள் அதன் சாதனைகளையும் சவால்களையும் நினைவுகூரும் நாள்! கிராம சக்தி வளர்க!

உலகின் மிகப் பெரிய நூலகம் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ உருவாக்கப்பட்ட தினம் 3.7 கோடிப் புத்தகங்கள்! மற்றும் அச்சுப் பிரதிகள்,35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு, ஆவணங்கள்!., 1.4 கோடிப் புகைப் படங்கள்,55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள் 470 மொழிகளில்.. 16 கோடி தொகுப்புகள்! 838 மைல் நீள நூலகத்தின் புத்தக அலமாரிகள்! இந்நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி,கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.-என்பது பல்வேறு சிறப்புகளையும் கொண்ட அமெரிக்காவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று லைப்ரரி ஆப் காங்கிரஸ்! நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக்கினார் அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ். 1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12 ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் இராணுவம், நகரைத் தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய நூலகம். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர். 1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில் நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக் காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலகமாகவும் விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’

ஐக்கிய அமெரிக்காவின் முதல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட செய்தித்தாள் “தி பாஸ்டன் நியூஸ்-லெட்டர்” (The Boston News-Letter) வெளியான நாள்!முக்கிய தகவல்கள்: பதிப்பாளர்: ஜான் காம்பெல் (John Campbell), பாஸ்டன் தபால் அதிகாரி. வகை: வார இதழ் (பின்னர் வாரம் இருமுறை). உள்ளடக்கம்: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய செய்திகள், கப்பல் வருகைகள், உள்ளூர் அறிவிப்புகள். விலை: சில பேன்ஸ் (பண்டைய நாணயம்). வரலாற்று முக்கியத்துவம்: இது அமெரிக்காவில் முதல் நீடித்த செய்தித்தாள் (1766 வரை 72 ஆண்டுகள் வெளியிடப்பட்டது). அரசியல் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கியது. “தி பாஸ்டன்” (The Boston) என்ற பெயரில் இல்லை – “தி பாஸ்டன் நியூஸ்-லெட்டர்” என்பதே சரியான பெயர்.சுவாரஸ்யமான உண்மை: முதல் பக்கத்தில் “கடவுள் ராணி அன்னைக்கு நீண்ட ஆயுளை அளிப்பாராக!” என்ற வாழ்த்து இடம்பெற்றிருந்தது (பிரிட்டிஷ் ராணி அன்னின் பெயரில்). இன்று, அமெரிக்க ஊடகவியலின் அடித்தளம் என்று இதைக் கருதலாம்!

ட்ரோஜான் குதிரைத் தாக்குதல்மூலம் கிரேக்கர்கள் ட்ராய் நகரைக் கைப்பற்றிய நாள் ஸ்பார்ட்டாவின் மன்னனான மெலனியஸின் மனைவி ஹெலனை, ட்ராயின் இளவரசனான பாரிஸ், மயக்கி அழைத்துச் சென்றதால், அகீயன்ஸ் என்று இலியட் காப்பியத்தில் ஹோமர் குறிப்பிடும் பண்டைய கிரேக்கர்கள், ட்ராய்மீது போர்தொடுத்தாக கிரேக்கப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. பத்தாண்டுகளாகப் போரிட்டும், ட்ராய் நகரை வீழ்த்த முடியாத கிரேக்கர்கள், போரைக் கைவிட்டுத் திரும்புவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். அவ்வாறு செல்லும் போது, ட்ராய் மக்களான ட்ரோஜான்களின், புனித மிருகமான குதிரையை அவர்களுக்குப் பரிசாக விட்டுச்செல்வதான குறிப்புடன், மரத்தாலான மிகப்பெரிய குதிரையை விட்டுச்சென்றனர். கிரேக்கர்கள் சென்றுவிட்டதாக நம்பிய ட்ரோஜான்கள், சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த மரக்குதிரையை நகருக்குள் இழுத்துச்சென்றனர். வெற்றியைக் கொண்டாடிய ட்ரோஜான்கள் குடித்து மயங்கிய நிலையில், குதிரைக்குள்ளிருந்து வெளியே வந்த கிரேக்க வீரர்கள் ட்ரோஜான்களைக் கொன்று குவித்து, நகரை அழித்தனர். நடைபெற்ற ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புராணக்கதை உருவானதாக ஆய்வாளர்கள் கூறுவதுடன், தற்போதைய துருக்கியில் உள்ள ஹிசார்லிக் என்ற இடமே ட்ராய் நகர் என்றும் அகழாய்வுகளின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். புராணங்களின் அடிப்படையில் கி.மு.1184 ஏப்ரல் 24இல் இது நடந்ததாக் கணக்கிடப்பட்டாலும், ஒரு சூரிய கிரகண நாள் என்று ஹோமர் குறிப்பிடுவதிலிருந்து, கி.மு.1178 ஏப்ரல் 16 என்றும் அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய எதையும் “கிரேக்கப் பரிசு” என்று குறிப்பிட இந்த நிகழ்வே காரணமாகியது. அத்துடன், நம்பிக்கைக்குரிய கோப்புகள் போன்று கணினிகளுக்குள் நுழைந்து தகவல்களைத் திருடும் நிரல்களுக்கு ட்ரோஜான் ஹார்ஸ் என்ற பெயர் ஏற்படவும் இந்நிகழ்வே அடிப்படையாக அமைந்தது. ட்ரோஜான் ஹார்ஸ் நிரல்கள் மற்ற வைரஸ்கள்போல கணினிக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், தான் நுழைந்த கணினிகளை, தன்னை உருவாக்கியவர்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன. பணயத்தொகை கேட்டு கணினித் தகவல்களை முடக்கும் ரேன்சம்வேர் தாக்குதல்கள் பொதுவாக ட்ரோஜான் ஹார்ஸ் நிரல்கள்மூலமாகவே நிகழ்த்தப்படுகின்றன.

உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கிய நாள் பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, கப்பலில் பணிக்குச் சேர்ந்த ஸ்லோகும், கப்பல்களிலேயே வசித்தார். ஏராளமான கடற்பயணங்களை மேற்கொண்டதுடன், திருமணத்திற்குப்பின் மனைவி, குழந்தைகள் அனைவருடனும் கப்பல்களிலேயே வசித்துக்கொண்டு பயணித்தார். உலகைச் சுற்றித் தனியாகப் பயணிக்கத் திட்டமிட்ட ஸ்லோகும், அதற்காக, 11.2 மீட்டர் நீளமுள்ள ஒரு பாய்மரப்படகை வாங்கி, அதனைத் தனக்கேற்றவாறு மறுகட்டமைப்புச் செய்து ஸ்ப்ரே என்று பெயரிட்டார். காற்றின் வேகம், திசை ஆகியவற்றிற்கேற்ப தானாகவே பயணிக்கும்வண்ணம், படகின் நீளம், பாய்மரத்தின் அளவு ஆகியவை வடிவமைக்கப்பட்டிருந்ததால், பல நேரங்களில் (ஒருமுறை 3200 கி.மீ. தொலைவுக்குக்கூட) சுக்கானில் கைவைக்காமலேயே ஸ்லோகும் இயக்க முடிந்தது. இப்படியான ஒரு படகு இல்லாமலிருந்தால், உலகைத் தனியே சுற்றுவது இயலாமற்போயிருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. கடற்பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்குமிடத்தின் நேரத்தைக் கணக்கிடும் மரைன் க்ரோனோமீட்டர் கருவியையே பயன்படுத்தாமல், பழைமையான கணக்கிடும் முறையைத்தான் ஸ்லோகும் பயன்படுத்தினார். 74 ஆயிரம் கி.மீ. பயணத்தை முடித்து, அமெரிக்காவின் ரோட் தீவிலுள்ள நியூபோர்ட் என்ற இடத்தை, மூன்றாண்டுகளுக்குப்பின் 1898 ஜூன் 27இல் வந்தடைந்தார் ஸ்லோகும். அப்போது அமெரிக்காவுக்கும், ஸ்பெயினுக்கும் போர் நடந்துகொண்டிருந்ததால், ஸ்லோகும்மின் இந்தச் சாதனை பெரிதாக வெளியே தெரியவேயில்லை. போர் முடிந்தபின்னரே பத்திரிகைகள் இதைப்பற்றி எழுதின. 1899இல் சென்ச்சுரி மேகசின் இதழில், இப்பயணத்தைப் பற்றி ஸ்லோகும் எழுதிய தொடர், ‘செய்லிங் அலோன் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து, ஏராளமாக விற்பனையானதுடன், இன்றும் முக்கியமான பயண இலக்கியமாக விளங்குகிறது. 1909 நவம்பர் 14இல் வழக்கம்போல குளிர்கால விடுமுறைக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஸ்ப்ரே-யில் சென்ற ஸ்லோகும் கடலிலேயே காணாமற்போய்விட்டார். கடலிலேயே வாழ்ந்திருந்தாலும், தேவையில்லை என்று அவர் நீச்சலே கற்றுக்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்!

உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week) ஏப்ரல் கடைசி வாரத்தில் (ஏப்ரல் 24-30) உலகளவில் கொண்டாடப்படுகிறது. நோக்கம்: தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துதல். அனைவருக்கும் சமமான தடுப்பூசி வாய்ப்புகள் உறுதி செய்தல். தவறான தகவல்கள் மற்றும் தடுப்பூசி பயத்தை எதிர்த்துப் போராடுதல். முக்கிய செய்திகள்: WHO, UNICEF போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தும் பிரச்சாரம். போலியோ, தட்டம்மை, டைட்டனஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து தடுப்பூசிகள் காப்பாற்றுகின்றன. COVID-19 தடுப்பூசி உட்பட புதிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு. செயல்பாடுகள்: இலவச தடுப்பூசி முகாம்கள் (குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில்). சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரப்புதல். மருத்துவர்கள் மற்றும் பொது மக்களுக்கான வலைப்பின்னல் கருத்தரங்குகள். “தடுப்பூசி = உயிர்காப்பீடு” இந்த வாரம், உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் தடுப்பூசி பதிவுகளை சரிபார்க்கவும்!

மிகநீண்ட காலமாக (35 ஆண்டுகளாக) வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் விண்வெளித் தொலைநோக்கியான ஹப்பிள், டிஸ்க்கவரி விண்ணோடம் மூலம் ஏவப்பட்டு, தாழ்வட்டப்பாதையில் புவியைச் சுற்றத் தொடங்கிய நாள் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் வரலாற்று ஏவுதல் ஹப்பிள் தொலைநோக்கியின் துவக்கம்: 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, NASA-வின் டிஸ்கவரி விண்கலம் (STS-31) ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியை (Hubble Space Telescope) விண்ணில் ஏவியது. இது பூமியின் தாழ்வட்டப்பாதையில் (Low Earth Orbit – LEO, ~547 km உயரம்) வைக்கப்பட்டு, வானியல் ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தியது. ஹப்பிள்-இன் சாதனைகள் (1990–2021): 31 ஆண்டுகள் செயல்பாடு: 2021 வரை தகவல்களை அளித்து, 1.5 மில்லியனுக்கும் அதிகமான படிமங்களை எடுத்தது. பிரபஞ்சத்தின் வயது (~13.8 பில்லியன் ஆண்டுகள்) மற்றும் டார்க் எனர்ஜி பற்றிய ஆராய்ச்சிகளுக்கு உதவியது. “பில்லியன் டாலர் பிழை”: ஆரம்பத்தில் முதிர் தெளிவின்மை (spherical aberration) இருந்தாலும், 1993ல் STS-61 பணியில் சரிசெய்யப்பட்டது. முக்கிய கண்டுபிடிப்புகள்: ஆழ் விண்வெளியின் மிக விரிவான படம் (“Hubble Deep Field”). கருந்துளைகள், நெபுலாக்கள் மற்றும் விண்மீன் திரள்கள் பற்றிய விரிவான தரவுகள். விண்மீன்களின் வேகம் மற்றும் பிரபஞ்ச விரிவாக்கம் (ஹப்பிள் மாறிலி) கணக்கீடு. தொழில்நுட்ப விவரங்கள்: எடை: 11,110 kg ஆயுட்காலம்: 15 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது, ஆனால் 31 ஆண்டுகள் செயல்பட்டது! மாற்றீடு: 2021ல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (JWST) ஏவப்பட்டது. “ஹப்பிள் மனிதகுலத்தின் கண்களை விண்ணுக்கு திறந்தது!”

அரை நூற்றாண்டுகால குவாரண்ட்டைனுக்குப்பின், க்ரின்யெர்ட் தீவு தீங்கற்றது என்று இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்ட நாள். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், ஜெர்மெனிமீது ஆந்த்ராக்ஸ் தாக்குதல் நடத்துவதற்காக இங்கிலாந்து இத்தீவில் ஆய்வுகள் மேற்கொண்டது. ஆந்த்ராக்சால் பாதிக்கப்பட்டவர்களின் தோலின்மீது ஏற்படும் கரிய திட்டுகளால், நிலக்கரிக்கான கிரேக்கச் சொல்லிலிருந்து இந்தப் பெயர் உருவானது. 1398இலேயே ஆங்கிலத்தில் ஆந்த்ராக்ஸ் என்ற சொல் காணப்படுகிறது. 1875இல்தான், ராபர்ட் கோச் என்ற ஜெர்மானிய அறிவியலாளர், ஆந்த்ராக்சை உருவாக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு, இந்த பாக்டீரியத்தின் வாழ்க்கைச் சுழற்சி, பரவல் முதலானவற்றைப் புரிந்துகொள்ள மட்டுமின்றி, அக்காலத்தில் விவாதத்திலிருந்த, இறந்த மற்றும் உயிரற்ற பொருட்களிலிருந்து உயிரிகள் ‘தானாகவே தோன்றும் கோட்பாட்டை’ தவறென்று நிரூபிக்கவும், ஏற்கெனவே இருக்கிற செல்களிலிருந்து புதிய செல்களாகத் தோன்றும் ‘செல் கோட்பாட்டை’ ஏற்கச்செய்து, நுண்ணுயிரிகளைப் பற்றிய புரிதல் உருவாகவும் காரணமாக அமைந்தது. 1905இல் கோச்சுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுவாசம், உணவுகள், தோலின்மீதான காயங்கள், ஊசி முதலானவற்றின்மூலம் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவும் ஆந்த்ராக்ஸ், பாதிக்கப்பட்டவர்களில் 20-80 சதவீத உயிர்ப்பலியையும் ஏற்படுத்தியதால், பொருளாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. அப்படியான ஆந்த்ராக்சை, ஜெர்மெனியின் கால்நடைகளுக்கு பரவச் செய்தால், அதை உண்ணும் ஜெர்மென் படைக்கு நோய் ஏற்படுவதுடன், கால்நடைகளும் அழிந்து உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் என்ற இங்கிலாந்தின் ‘ஆப்பரேஷன் வெஜிட்டேரியன்’ திட்டத்திற்கான சோதனைகள், ஸ்காட்லாந்திலிருந்து ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த, தனியாருக்குச் சொந்தமான இத்தீவில் மேற்கொள்ளப்பட்டன. 1944வரை இந்த ஆயுதம் முழுமைபெறாததால், இது போரில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், தீவு முழுவதும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவால் நிரம்பிப்போனது. தீவின் உரிமையாளர் திரும்பக்கேட்டாலும், சுத்தம் செய்யப்பட்டபின் 500 பவுண்டுகள் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றது அரசு. ஆனால், சுத்தம் செய்ய முயற்சிசெய்யப்படாத நிலையில், ஸ்காட்லாந்தின் ஓர் அமைப்பு, 1986இல் இத்தீவின் மண்ணை பாக்கெட்டுகளில் அடைத்து அரசியல் தலைவர்களுக்கு அனுப்பியதுடன், இங்கிலாந்தின் முக்கிய இடங்களில் பரப்பப்போவதாக எச்சரித்தது. அதன்பின்னரே, வேதிமக் கலவைகளைத் தெளித்ததுடன், மேற்பகுதி மண்ணையும் அகற்றும் பணிகள் நான்காண்டுகள் மேற்கொள்ளப்பட்டு, தீமையற்றதாக 1990இல் அறிவிக்கப்பட்டது. உரிமையாளரின் வாரிசுகளிடம், அவ்வாண்டின் மே 1இல் 500 பவுண்டுகள் பெற்றுக்கொண்டு தீவு ஒப்படைக்கப்பட்டது.

ஜி. யு. போப் பர்த் டே இன்று: ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 12, 1908) அமெரிக்காவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். வட அமெரிக்காவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் நோவா ஸ்கோஷியா என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர் விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காகவே 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவ ரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப் . தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

ஜெயகாந்தன் பிறந்த நாள் – கடலூரில் பிறந்த டி. ஜெயகாந்தன், தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், திரைப்பட இயக்குனர், விமர்சகர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் நாவல் உலகில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் . தனது படைப்புகள் மூலம் சமூகச் சிந்தனையை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் இவர். அவர் காலத்தில் இருந்த போலியான கலாச்சார மரபுகளை கட்டுடைத்து சமூக ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முனைந்தவர் ஜெயகாந்தன் . தன்னுடைய படைப்புகள் பற்றி அவருடைய சில துளிகள்…………. >> “முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே” >> “ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்” >> “மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே” >> “அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்” >> “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்.

ஆர்மீனிய இனப்படுகொலையின் (Armenian Genocide) துவக்கம் வரலாற்றுப் பின்னணி: 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, ஒட்டோமான் பேரரசு (தற்போதைய துருக்கி) ஆர்மீனியர்களுக்கு எதிராக முறையான இனப்படுகொலையைத் தொடங்கியது. இந்த நாளில் கான்ஸ்டண்டினோபிள் (இஸ்தான்புல்) நகரில் 250க்கும் மேற்பட்ட ஆர்மீனிய அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டனர். இனப்படுகொலையின் கோரங்கள்: 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பட்டினியால் சாகடிக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சிரியா மற்றும் மெசபடோமிய பாலைவனங்களுக்கு மரணப் பயணங்களில் (Death Marches) அனுப்பப்பட்டனர். தேசிய மறுப்பு: துருக்கி இன்றும் இதை “இனப்படுகொலை” என ஏற்கவில்லை. அங்கீகாரம் & நினைவேற்புகள்: 32 நாடுகள் (அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட) இதை இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஏப்ரல் 24 “ஆர்மீனிய இனப்படுகொலை நினைவு நாள்” (Armenian Genocide Remembrance Day) என ஆர்மீனியா மற்றும் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. நினைவுச் சின்னங்கள்: யெரேவனில் த்சிட்செர்னாகாபெர்ட் நினைவகம் (கருப்பு பிரமிடு) அமைந்துள்ளது. மனிதாபிமானப் பாடங்கள்: “இது மனிதகுலத்தின் இருண்ட அத்தியாயம்; இத்தகைய கொடுமைகள் மீண்டும் நிகழாது என்பதே நம் கடமை.” #NeverAgain #ArmenianGenocide (ஆர்மீனிய இனப்படுகொலையின் 109வது ஆண்டு நினைவாக இந்த தகவல்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!