நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் மோத உள்ளன

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன

இந்த போட்டியையோட்டி நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!