ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி கைது.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  பாராமுல்லா மாவட்டம் அந்தேர்கம் பட்டான் பகுதியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சாஜித் ஃபரூக் (19) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  முன்னதாக, பிஜ்பெஹ்ரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியில் ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

  அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனா். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!