தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் அழிப்பு…

 தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் அழிப்பு…

தலைநகர் தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தில்லியிலுள்ள நிலோட்டி என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கழிவு சேகரிப்பு மையத்தில் மொத்தம் 207.109 கிலோ போதைப் பொருள்களை சுங்கத்துறை உயர்மட்டக்குழு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 24) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத முறையில் மற்றும் தற்போது உள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகளின்படி அழித்தனர்.

  இவை கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை 15 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...