சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த வடமாநில இளைஞர்..!

வாயில் பஞ்சு… பள்ளிச் சீருடையில் உடம்பெல்லாம் ரத்த காயங்கள்…

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமைச் சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கொங்கலாபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு பத்மா என்ற மனைவியும், சின்னமுத்து (11) என்கிற மகனும், பிரித்திகா (8) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். சுந்தரம் மற்றும் அவரது மனைவி பத்மா இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். சிறுவன் சின்னமுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பும், சிறுமி பிரித்திகா 3–ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இருவரும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பினர்.

பின்னர் சிறிது நேரத்தில் சிறுமி பிரித்திகா மட்டும் தனது வீட்டின் பின்புறம் உள்ள பொது கழிப்பிடத்துக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுநாள் காலையில் எல்லைப்பகுதியில் சிறுமி கீர்த்திகா, காட்டுப்பகுதியில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!