அதிமுகவினருக்கு இபிஎஸ் அட்வைஸ்!

உழைத்ததால் உயர்ந்து நிற்கிறோம்… உயர்ந்து இடத்துக்கு வர உழையுங்கள்… 

பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்று முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளரும் அமைச்சருமான உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!