கோடி, கோடியா சம்பளம் வேணும்..

கோடி, கோடியா சம்பளம் வேணும்.. விருது வேணும்.. ஆனா இது மட்டும் வேண்டாமாம்.. நயன்தாரா….

  தமிழ் சினிமாவை தனி ஒரு நாயகியாக கலக்கி வருபவர் நயன்தாரா. கமர்சியல் படங்கள், கதையின் நாயகியாக வரும் படங்கள் என அனைத்திலும் முதல் தேர்வாக இருப்பவர். 6 கோடி வரை சம்பளம் கேட்டாலும் ஆசராமல் கொடுக்க தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள்.

  இரண்டு மூன்று தடவை தமிழ் சினிமாவை விட்டு விலகி சென்றாலும் ரசிகர்கள் இவரை விடாமல் பிடித்துக் கொண்டனர். அதன் காரணமாகவே தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் சமீபகாலமாக நயன்தாராவின் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாக எழுந்துள்ளது.

    நயன்தாரா கேட்ட சம்பளத்தை தரும் தயாரிப்பாளர்கள், நயன்தாரா பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு ஏகப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. பொதுவாகவே ஒரு சினிமா படம் எடுப்பது மட்டுமல்லாமல், அதனை வியாபாரம் செய்வதிலும் நடிகர் நடிகைகளின் பங்கு இருக்க வேண்டும்.

   முன்னணி நடிகரான தளபதி விஜய், ரஜினிகாந்த் கூட இன்னமும் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளர்களை மதிக்காமல் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!