திருவாதிரை களி செய்வது எப்படி??

 திருவாதிரை களி செய்வது எப்படி??
தேவையானவை:-
அரிசி 2 ஆழாக்கு 
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம் 1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய் 5
முந்திரி 10
நெய் 200 கிராம்

அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில் 
தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது
இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு
சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .  நன்றாக 8 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்
மேலே நெயில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி செய்து போடவும் . நெய் அதிகமாக விட்டு கிளறவும் – சுவை கூடும். சுவையான திருவாதிரை களி இதோ உங்களுக்காக இதற்க்கு பிரத்தியேக கூட்டு ஓன்று உண்டு அதை 7 தான் கூட்டு என்று அழைப்பார்கள் அதைப் பற்றி தனியாக பார்க்கலாம் பொதுவாக இதை 7 தான் கூட்டு என்று சொல்லுவார்கள்.

ஆனால் நாம் போடக்கூடிய காய்களை பார்ப்போம்:-
உருளைக்கிழங்கு 

சேப்பங்கிழங்கு 
சேனைக்கிழங்கு 
அவரைக்காய் 
வாழைக்காய் (விருப்பம் இருந்தால் )
கொத்தவரங்காய் 
பீன்ஸ் 
கேரட் 
பச்சை பட்டாணி 
மொச்சை 
பூசணிக்காய் 
பரங்கிக்காய் 
சர்க்கரைவள்ளிக்கிழங்கு 
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ)

தேவையானவை :-

மேலே சொன்ன காய்கறிகள், பருப்பு 2 கப் ( வேகவைத்தது), புளித்தண்ணி கரைத்தது (4 கப்)

வறுத்து பொடி செய்ய தேவையானவை
கடலைப்பருப்பு 
வரமிளகாய் 
தேங்காய் துருவல் 
தணியா

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மேலே சொன்னவற்றை 
தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும் , இதை மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும் நறுக்கிய காய்களை கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அடுப்பில் நன்றாக வேகவைக்கவும் காய்கள் வெந்த நிலையில் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து உப்பு , பெருங்காயம் சேர்த்து , அதனுடன் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து , வேகவைத்து தயார் நிலையில் உள்ள பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் (கொதிக்கும் நேரம் அவரவர் சுவைக்கும் திறனை பொருத்தது) கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை போட்டு விடவும் . அடுப்பில் இருந்து இறக்கி , செய்துவைத்த களி , கூட்டை இறைவனுக்கு படைத்து , சுவைத்தால் சுவை கூடும்

திருவாதிரை களி :—

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

திருவாதிரை விரதம் :–

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...