முதல்வர் பழனிசாமி.

 முதல்வர் பழனிசாமி.
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இதில் சிபாரிசு என ஏதும் இல்லை, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தமிழகம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.ஆளுமைத் திறனில் தமிழகம் முதலிடம் என்பது நாம் அனைவருக்கும் பெருமை. எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்.ஊரகப் பகுதிக்கும், நகர்ப் பகுதிகளுக்கும் தனித்தனியே தேர்தல் என்பது புதியது அல்ல.சுதந்திரமாக நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...