சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!

 சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட 19 தொழில் நிறுவனங்கள் இன்று திட்டங்களை தொடங்குகின்றன. அதன்படி ரூ,17,616 கோடி முதலீடுகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதன் மூலம் ஏறத்தாழ 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டு ரூ,51,000 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக ரூ,68,873 கோடிக்கு மேல் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன. இதன் மூலம் 1,06,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...