கலைகளில் ஓவியம் சாவித்திரி – மு.ஞா செ.இன்பா – ஓவியம் – 3

காதல் நிலவே கண்மணி ராதா……!   ஓவியம் மூன்று
——————————————————–
” மனம் போல் மாங்கல்யம்” படப்பிடிப்பில்முதன்முதலாக அவரைச் சந்தித்தார்  சாவித்திரி
ஒரு இளைஞர் சுறுசுறுப்பாய்  சாவித்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த வெள்ளை நிறச் சட்டையும், அதற்கு இணையான  கால் சட்டையும் அந்த இளைஞரை கவர்ச்சியாக காட்டியது.
சாவித்திரியை நோக்கி வந்து கொண்டு இருந்த  அவரைப் பார்க்காமல் விழிகளை  அப்பறப்படுத்த முயற்சித்தால் சாவித்திரியின் கட்டளையைக் கண்கள் கேட்பதாக இல்லை.அந்த பெரிய கணைகள் ஓடோடி அந்த இளைஞனை தீண்ட , சாவித்திரியிடம் ஓர் இனம் புரியாத பரவசம்.
..இவர்தான் இந்தப் படத்திற்கு கதாநாயகன் என்று அந்த இளைஞனை இயக்குநர் பி.புல்லையா அறிமுகப்படுத்த.., புல்லையாவுடன் வந்த அந்த இளைஞன் சாவித்திரியைப் பார்த்து ” ஹலோ” மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!