இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானோடு தொடர்புடைய நபர்களுக்காக உளவு வேலை பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் ஆந்திரா நுண்ணறிவு பிரிவு உளவுப்பிரிவினரால் கைது.

உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதிப்பு: டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புகடை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைப்பு.

அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நமது அடையாளம், மொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. – முதல்வர் சர்பானந்தா சோனாவால்.

தமிழக வேலை தமிழர்களுக்கே, 90% வேலை வாய்ப்பினை தமிழர்கள்பெறும்படி அரசாணை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முன் தமிழ்தேசிய பேரியக்கத்தினர், 200க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. உரிய கல்வித்தகுதி இல்லையெனக் கூறி பேராசிரியர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி, போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு.

தமிழகத்தில் நாளை முதல் ஜன.1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை. கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!