இன்றைய முக்கிய செய்திகள்

கச்சத்தீவு கடல்பகுதியில், 50க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த‌து இலங்கை கடற்படை.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி உடைய 10 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறையின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை. வன்முறையில் சமூக விரோத சக்திகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் – உள்துறை அமைச்சகம்.

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 302புள்ளிகள் உயர்ந்து, 41,244 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. மொழிகளை மட்டும்தான் மாநில வாரியாக வகைப்படுத்த முடியும், மதங்களை அல்ல – உச்சநீதிமன்றம்.

ஒடிசா கடற்கரையில்
நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி. சோதனையில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து பிரமோஸ் ஏவுகணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!