வரலாற்றில் இன்று ( 06.06.2024)

 வரலாற்றில் இன்று ( 06.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 6  கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.
1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.
1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.
1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.
1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.
1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.
1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.
1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.
1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1799 – அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)
1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)
1901 – சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)
1930 – சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)
1948 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
1986 – பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)
1968 – ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)
1996 – ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)
2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
2009 – ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்

சிறப்பு நாள்

தமிழீழம் – மாணவர் எழுச்சி நாள்
சுவீடன் – தேசிய நாள்
தென் கொரியா – நினைவு நாள்
குயின்ஸ்லாந்து நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...