நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன்

விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவிய  சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன்.
சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர். சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை ‘S’ என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!