வரலாற்றில் இன்று ( 08.04.2024 )

 வரலாற்றில் இன்று ( 08.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

217 – உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
876 – டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது.
1232 – மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர்.
1277 – உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.
1767 – தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.
1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
1832 – முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசூரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர்.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
1866 – ஆத்திரியப் பேரரசுக்கு எதிராக இத்தாலியும் புருசியாவும் அணி திரண்டன.
1867 – முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.
1886 – வில்லியம் கிளாட்ஸ்டோன் அயர்லாந்தின் சுயாட்சி சட்டமூலத்தை பிரித்தானிய மக்களவையில் சமர்ப்பித்தார்.
1906 – ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.
1911 – இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.
1913 – அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதகு சட்டமியற்றப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போர்: நடிகர்கள் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், சார்லி சாப்ளின் ஆகியோர் போருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி தில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1924 – இசுலாமிய நீதிமன்றங்கள் துருக்கியில் இல்லாதொழிக்கப்பட்டன.
1929 – இந்திய விடுதலை இயக்கம்: தில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகை: [[சோவியத் ஒன்றியம்|சோவியத் படையினர் லென்ன்கிராதுக்கான தொடருந்துப் பாதையை அமைத்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
1943 – அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் [[கூலி|ஊதியங்களையும்], பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அனோவர் நகரில் 4,000 அரசியல் கைதிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து மீது தவறுதலான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தப்பியவர்கள் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.
1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1954 – கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
1954 – தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
1960 – இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்ட செருமானியப் பிரதேசங்களை 280 மில்லியன் மார்க்குகளுக்கு கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் நெதர்லாந்தும் மேற்கு செருமனியும் கையெழுத்திட்டன.
1961 – பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1985 – போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
2000 – அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
2004 – தார்ஃபூர் போர்: சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

பிறப்புகள்

1732 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796)
1864 – அபலா போஸ், மேற்கு வங்க சமூக சேவையாளர் (இ. 1951)
1892 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1970)
1892 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)
1911 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)
1917 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணை கலைஞர் (இ. 1988)
1938 – கோபி அன்னான், கானா நாட்டு பொருளியலாளர், ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச் செயலர்
1949 – ஜோன் மேடென், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
1954 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2007)
1983 – அல்லு அர்ஜுன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1988 – நித்யா மேனன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி

இறப்புகள்

1461 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423)
1857 – மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)
1894 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (பி. 1838)
1964 – காருக்குறிச்சி அருணாசலம், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1907)
1968 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)
1969 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய வானியலாளர் (பி. 1900)
1973 – பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1881)
1973 – நீலகண்ட ஸ்ரீராம், பிரம்மஞான சபை தலைவர் (பி. 1889)
1989 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1929)
1992 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர் (பி. 1907)
2008 – சரண் ராணி பாக்லீவால், இந்துத்தானி இசை, சரோத் இசைக் கலைஞர் (பி. 1929)
2013 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)
2015 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1934)
2015 – நாகூர் இ. எம். ஹனீஃபா, தமிழக இசுலாமியப் பாடகர் (பி. 1925)
2016 – எலிசபெத் உரோயமர், அமெரிக்க வானியலாளர் (பி. 1929)

சிறப்பு நாள்

புத்தர் பிறந்தநாள் (யப்பான்)
பன்னாட்டு உரோமா நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...