முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்

சென்னை மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை.

பொங்கல் பண்டிகை
க்கு 1000 ரூபாய் பரிசு – அரசாணை வெளியீடு: ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. கடந்த முறை போல், எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து அரசாணை வெளியீடு.

பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

நடப்பாண்டில் மீன்பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு வழங்க நிவாரணத்தொகையான ரூ.88 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு..

அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார்
; அஜித் பவார் கட்சியின் பதவியில் தொடர்வார் – தேசியவாத காங்கிரஸ். மூத்த தலைவர் நவாப் மாலிக். தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆதரவு அளித்த‌து குறித்து சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன்; கவலைப்பட வேண்டாம் – அஜித் பவார்.

முன்னாள் கடற்படை தளபதி சுஷில் குமார் (79) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். நாகர்கோவிலில் பிறந்த சுஷில் குமார் 1965, 1975ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களில் முக்கிய பங்காற்றியவர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 3 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடியில் அமைக்கப்பட உள்ளன: மத்திய அரசு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...